Tuesday, March 15, 2005

ஆலம் விதை

ஆலம் விதை போல் என் காதல்..
அதை மூடியிருக்கும் மண்போல் என் மனம்..
முன்னனுபவமாய் மனத்தின்மேலிருக்கும் தழும்பு..

விதைக்கு விடுதலைக் கொடுத்து,
மண்ணைப் பிளக்கவிட்டு,
ஆலமரத்தை வளரவிட பயமாயிருக்கு !

இன்னுமொரு தழும்பை என் மனம் தாங்காது.. அதனால் !!

என் உயிரை மதிக்கிறேன்

என் கண்களை மதிக்கிறேன்,
உன்னைப் பார்க்கமுடிவதனால்.

என் கால்களை மதிக்கிறேன்,
உன்னருகில் வரமுடிவதனால்.

என் கைகளை மதிக்கிறேன்,
உன் விரல் தொடமுடிவதனால்.

என் நாவை மதிக்கிறேன்,
உன்னோடு பேசமுடிவதனால்.

என் உயிரை மதிக்கிறேன்,
அன்பே, உன்னோடு வாழமுடிவதனால் !!


கடல்களையும், மலைகளையும் உனைப்பாட அழைத்திருக்கலாம்..
அன்பே, அவை என் உணர்வரியுமா ?

அருவிகளையும், ஆறுகளையும் உனைப்பாட அழைத்திருக்கலாம்..
அன்பே, அவை உன்னையரியுமா ?

என் கை கால்களை அழைத்ததேனென்றா கேட்கிறாய் ?
அவைகள் என் உணர்வரிந்தவை !
உண்மையில், உன்னையரிந்தவை !!