Saturday, June 18, 2005

என்னவள் அழகானவள் !!

அன்னம்தான், கொஞ்சம் காட்டாறு நடையவளுக்கு.
மீன்தான், கொஞ்சம் கோணல் கண்ணவளுக்கு.
முத்துக்கள்தான், கொஞ்சம் முன்பின்னான பல்லவளுக்கு.
ஒவியம்தான், கொஞ்சம் கரிய நிறமவளுக்கு.
சிலைதான், கொஞ்சம் நெளிந்த வடிவவளுக்கு.
அழகு நிறந்தரமில்லாதது !

தென்றல்தான், கொஞ்சம் புயலின் குணமவளுக்கு.
இன்னிசைதான், கொஞ்சம் இடியின் குரலவளுக்கு.
தேன்தான், கொஞ்சம் கூரான நா அவளுக்கு.
பூதான், கொஞ்சம் முரடான கையவளுக்கு.
அன்பும் பண்புமே அழிவில்லாதது !

அதனால்தான் என்னவள் அழகானவள் !!